சாரல் காலம் 3

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4

===========================================================
"காயத்ரி"

"காயத்ரி"

"காயத்ரி ஹரி கிருஷ்னன்" நல்லாதானே இருக்கு. அடடடா, தஞ்சாவூர் வரைக்கும் என்னால அவ பேரை ஞாபகப்படுத்திக்கவே முடியலையே, பஸ் அ விட்டு இறங்கனதுக்கு அப்புறம் அவ ஃப்ரெண்ட்ஸ் கூப்பிடும் போதுதானே ஞாபகம் வந்தது. பின்னாடியே போயிருக்கலாம், ஆனா அவங்க கார்ல இல்லை போனாங்க, என்னை கூட்டி போக வந்தது பைக் தான், அதுவும் சூர்யாவா இல்லைன்னா யார் வந்து இந்நேரத்துக்கு என்னை கூட்டிப் போவாங்க?"


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikOvlupJjdZfZWhSIRAcEAv-j-sGkSqpueY9GueGPgQ1rTYvht8D_jfHB8P2IqtiSKpLP6FARrmSifAY1Zs25S11A14ov9vW9yn1mmKJpGfgnHiyn06DJDP4dNswwTYhiSlIF7IQme3S8/s1600/road+at+night.JPG

ஹரிக்கு அந்த இரவு நேரம், நண்பனுடன் போகையில் காதல் நினைப்புகள் ஒரு வித போதையை, உற்சாகத்தை கொடுத்தது.

"டேய் தக்காளி, பின்னாடி உட்கார்ந்துட்டு தூங்கறியா?"

"இல்லடா"

"அப்புறம் ஏன் பேசாம வர்ர?"

"இல்லை பஸ்ல சரியா தூங்கலை, அதான்"

"டேய் ஃபிராடு, வந்து இறங்கனதும் ஏன்டா போன் எடுக்கலைனு கேட்டதுக்கு சைலன்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்னு சொன்ன?"

"ஓ அப்படியா சொன்னேன்?"

"டேய் ஹரி, பொய் சொல்றதுக்குலாம் ஒரு திறமை வேணும், ஒழுங்கா சொல்லிரு, என்ன பிரச்சனை?"

"பிரச்சனைலாம் ஒன்னுமில்லடா?"

"ஏதோ இருக்கு, இல்லைனா ராத்திரில உன் முகம் இவ்வளவு பலிச்சுனு இருக்குமா? கீழே கடந்து 100 ரூபாய் கிடைச்சதா? இல்லை பஸ்ல டிக்கெட் எடுக்காமயே வந்துட்டியா?"

"டேய், என்னடா இவ்வளவு சில்லறையா கேட்கற? நான் இதுக்குலாமா சந்தோச படுவேன்?"

"ஆமா நாயே, நீ வேற என்ன பெருசா செஞ்சுருக்க போற? சரி நீயே சொல்லு என்ன ஆச்சு?"

"மச்சான் நான் காயத்ரிய பார்த்தேன்டா"

"எந்த காயத்ரி?"

"அதான்டா, ஜீனியர் பொன்னு, நாம கூட ஓட்டுவமே?"

"எங்க பார்த்த?"

"2 பேரும் ஒன்னாதான்டா சேலத்துல இருந்து பஸ்ல வந்தோம்"

"சரி அதுக்கு என்ன இப்ப?"

"அவ என்கிட்ட பேசனாடா?"

"நீ உன் கர்ச்சீஃப் போட்டு சீட் பிடிச்சு குடுத்தியாக்கும்?"

"இல்லைடா, அவதாண்டா நான் சாப்பிட்டதுக்கும் சேர்த்து பில் குடுத்தா"

"ஏன் உன்கிட்ட காசு இல்லை?"

"இருந்ததே"

"அப்ப நீயே அவளுக்கும் சேர்த்து குடுத்துருக்கலாம்ல, கெத்தா இருந்துருக்கும்."

"இல்லைடா,அவ கொடுத்ததுக்கு அப்புறம் தான் எனக்கே அவ எனக்கும் சேர்த்து கொடுத்தது தெரிஞ்சது"

"சரி, போய் உன் பில்லுக்கான காச அவகிட்ட கொடுக்க வேண்டியது தானே?"

"கொடுத்தேன்? அவ இருக்கட்டும் பரவாயில்லைனு சொல்லிட்டா"

"நீயும் லாபம்னு வந்துட்டியா? ஏன்டா அவ கூட உனக்கு ஏற்கனவே பழக்கமா?"

"உனக்கு தெரியாமயா?"

"அவ எதுக்கு தஞ்சாவூர் வந்துருப்பா?"

"வீட்டுக்கு வந்துருப்பா"

"அவ ஊர் திருச்சிடா"

"உனக்கெப்படி தெரியும்?"

"இதெல்லாம் பொது அறிவுடா"

"இருக்கட்டும், இருக்கட்டும்"

"சரி, அவ உனக்கு பில் கொடுத்துட்டு போய்ட்டா, அதுல என்ன பிரச்சனை?"

"ஒன்னுமில்லை, எனக்கு ஒரு மாதிரி குழப்பமா இருக்கு? அவளை திரும்ப பார்க்கனும் போல இருக்குனு வையேன்"

"நீயும் பாதிக்கப் பட்டுருக்க"

"டேய்?"

"தப்பில்லைடா, அது நல்ல பொன்னுதான், கல்யாணம் முடியட்டும், கச்சேரிய காலேஜ்ல வச்சுப்போம்"

இவங்க நினைச்ச மாதிரிலாம் நடந்துருந்தா ஏன் அத்தனை அர்ரியர் வைக்க போறாங்க, போய் கல்யாண வீட்ல இறங்கரப்பவே கச்சேரி தான்.


---------------------------------------------------------------------------------------தொடரும்------------

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...