Posts

சலம் - பா.ராகவன் - விமர்சனம்

Image
தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், "இனி சொல்ல ஒன்றுமில்லை" என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.       முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.   வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.   முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.   இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும...

மைத்திருவிழா

நல்ல வெயில். ஒவ்வொரு வருடமும் இதுவரை இப்படியான வெயிலைப் பார்த்ததில்லை என்ற வசனத்தை எதிர்கொள்வது வழக்கமாகி விட்டது. காரணம் இதோ கண்ணெதிரேயே தெரிகிறது. இந்தச் சாலையில் முன்பெல்லாம் இருபக்கமும் இருந்த அடர்த்தியான புளிய மரங்கள் நினைவில் கூட மங்கலாகத்தான் தெரிகின்றன. சாலை விரிவாக்கம் என்ற வசதிக்காக எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறோம்? ஐம்பது கிலோமீட்டருக்கு மூன்று முறை ஜூஸ் குடிக்க வண்டியை நிறுத்துமளவு வெக்கை. காலை 10 மணிக்கெல்லாம் பயிற்சி நிலையத்திற்கு வரச் சொல்லித்தான் ஆர்டர். ஆனால் பூத் ஆர்டர் வருவதற்கு எப்படியும் 12 மணிக்கு மேலாகும் என்பதால் எல்லோரும் 1 மணிவாக்கில்தான் வருவார்கள். எங்கள் குழுவில் எல்லோரும் ஆண்கள். வழக்கமாகத் தேர்தல் பணிக்கெனக் குழுக்களைப் பிரிக்கும்பொழுது ஆண்களும் பெண்களும் இருப்பது போலத்தான் பிரிப்பார்கள். ஏனென்றால் பெண்களால் அனைத்து உடல் உழைப்பு வேலைகளையும் செய்ய முடியாது. மேலும் பூத் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது அத்தனை எளிதல்ல. முழுக்கப் பெண்களென்றால் எளிதாக மிரட்டி தேர்தலை அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு நடத்தத் துவங்கி விடுவார்கள். என்னுடன் கடந்த உள்ளாட்சித் தேர்தலு...

எதற்காக வாசிப்பு?

உலக புத்தகத் தினத்தன்று வாசிப்பு குறித்து KSR கலைக் கல்லூரியில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். உரையாட துவங்கியதும் எழுந்து முதலில் அரங்கினை கவனித்தேன். எப்போதும் போல் முதல் இரு வரிசை நிரப்பப்பட்டிருக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, வகுப்பறையில் துவங்கி எந்த இடமாக இருந்தாலும் முதல் வரிசையில் அமர அனைவரும் தயங்குகிறோம். உங்களை வந்து அமருங்கள் என்று நான் அழைக்கப் போவதில்லை. ஆனால் ஏன் இங்கு அமர தயங்குகிறிர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறேன். யாரேனும் பதில் சொல்லுங்கள். ஒரு பெண் எழுந்து "முன்வரிசைல இருக்கவங்களைப் பாத்து ஏதாவது கேள்வி கேட்டுருவாங்கன்னுதான் சார்" கைத்தட்டினேன். என்னுடன் மற்றவர்களும் தட்டினார்கள். பதில் தெரியாத கேள்விகளை எதிர்கொண்டு விடப்போகிறோம் என்று கல்லூரியிலும் பயம். இது உங்களுக்குச் சரியாகப் படுகிறதா? உங்களை அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டேன். அது அவரவர் ஆர்வம் சம்பந்தப்பட்டது. ஆனால் கேள்விகளைத் தவிர்க்க ஓடத் துவங்கினால் எது வரை ஓடுவீர்கள்? இறப்பு வரை உங்களது கருத்துக்களைக் கேட்கவாவது வினாக்கள் துரத்திக்கொண்டுதான் இருக்கும். அவனுக்கு, அவளுக்கு எதுவும் தெரி...

பெருந்திணை - படலம் - 8

Image
  பெண்களிடம் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக அவர்களது கியுரியாசிட்டியை சொல்லலாம். அதிலும் தன்னைக் குறித்த ஒன்றினை தெரிந்து கொள்ள அவர்கள் காட்டும் அதீத ஆர்வம் எப்போதும் எதிலாவது ஒன்றில் சிக்க வைப்பதுதான் வழக்கம். சைந்தவிக்கு அசோக் தான் குறித்து எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தது. அதே சமயம் இதனை நேரடியாக கேட்கவும் முடியாது. கேட்டாலும் கிடைக்கும் பதில் நேர்மையானதாக இருக்கப் போவதில்லை. இதற்கு என்ன செய்வது என்று மனம் குழம்பியது. எப்போதும் அல்ல. அவ்வபோது. நாளாக நாளாக அது அடங்கி விடும் என சமாதானப் படுத்திக் கொண்டாள்.  அடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒரு தினத்தில் அவள் வெளியே சென்று திரும்பும் போது ஏகமாக மழையில் மாட்டிக் கொண்டாள். எதிர்பாராத மழை. அவள் ஸ்கூட்டியில் சென்றிருக்க, அணிந்திருந்த ஹெல்மெட் உச்சந்தலையை மட்டும்தான் காப்பாற்றியிருந்தது. ஓரளவு நனைந்த பிறகு வீட்டிற்கே சென்று விடலாம் என்று மழையிலேயே வந்து விட்டாள். அப்போது மழை விட்டு, தூறல் மட்டும்தான். வண்டியை நிறுத்தி விட்டு லிஃப்ட்டில் ஏறினால் உள்ளே அசோக். அவன் மட்டும். ஒரு கணம் தயங்கினாலும...