அன்பர்களுக்கு வணக்கம். என் நண்பன் ஒருவன் சரித்திர நாவல்கள் விரும்பி படிப்பான், அவனது தந்தையுடன் பேசுகையில் அவர் நமது முன்னோர்களையும், கடவுள் வழிபாட்டையும் மறுத்து பேசியது பற்றி குறிப்பிட்டான். அது சம்பந்தமாக அவனிடம் நான் பேசியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். நான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும், என்னால எல்லா உயிரினத்தையும் அடிமைபடுத்த முடியும், நான் சக்கரத்தை கண்டு பிடிச்சுட்டேன், நெருப்பை கண்டு பிடிச்சுட்டேன், கம்ப்யுட்டர் கண்டுபிடிச்சுட்டேன்னு வெட்டியா சத்தம் போட்டு பேசறவங்க கடவுளை புரிஞ்சுக்க மாட்டாங்க, எல்லாத்தையும் கண்டுபிடிச்ச மனுசனால 2 நாள் சாப்பிடாம தூங்காம இருக்க முடியுமா? இல்லை 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டு ஒட்டுக்கா தூங்கிட்டே இருக்க முடியுமா? இன்னும் மனுசனால மனுசனையே ஜெயிக்க முடியலைய, பசிச்சா சாப்பிட்டுதான் ஆகனும், தூக்கம் வந்தா தூங்கிதான் ஆகனும், உன்னால ஒன்னும் கட்டுபடுத்த முடியாது, கடவுளை எதுக்கு வணங்கனும்? முதல்ல மனுசன் யாரை வணங்குவான், தன்னை விட வயசுல பெரியவங்களை, அதுக்கு என்ன அர்த்தம்? நான் உன்னை விட சின்னவன், உன் அளவுக்கு நான் இல்லைனு அர்
அன்பர்களுக்கு வணக்கம், நமக்கு எப்பவுமே ஒரு படத்தை பார்த்தா அதோட முதல் பார்ட்லருந்து பார்த்தாதான் புரியும், இல்லைனா சும்மாவே அவங்க பேசற இங்கிலிஸ் புரியாது, இதுல யாருக்கு யார் என்ன உறவுனு தெரியலைனா விளங்கவே விளங்காது. அதான் INDIANA JONES படத்தோட எல்லா பார்ட்டையும் எடுத்து வச்சு ஒவ்வொன்னா பார்த்துட்டு இருக்கேன். இப்படத்தின் முதல் பாகம் விமர்சனம் படிக்க... இதோட 2 வது பார்ட் Indiana Jones And The Temple Of Doom, கதைக்களம் நம்ம இந்தியா, வழக்கம் போல முதல்ல வில்லன்கிட்ட சண்டை போட்டு ஹீரோயிசம் காட்டி தப்பிக்கும் போது செவனேன்னு பாடிகிட்டு இருந்த ஹீரோயின இழுத்துகிட்டு ஒரு ஃப்ளைட் ல ஏறிடறார். கொடுமை என்னன்னா அந்த ஃப்ளைட் வில்லனுக்கு சொந்தமானது. பாதி வழில பெட்ரோல் அ பிடிங்கி விட்டுட்டு பைலட் 2 பேரும் இருக்கற பாரசுட்லாம் எடுத்துகிட்டு குதிச்சுடறாங்க, இருக்கற போட் ல குதிச்சு தப்பிக்கறாங்க, அப்புறம் தான் அவங்க வந்து சேர்ந்துருக்க இடம் இந்தியானு தெரிய வருது. நம்ம ஆர்க்கியாலஜிஸ்ட் ஹீரோ, அழகான ஹீரோயின், அவங்களுக்கு கூட வர்ர குட்டிப்பையன் 3 பேரும் ஒரு கிராமத்துக்கு போய் டெல்லிக்கு
ஒரு பெரிய மனிதர் அல்லது மற்றவர்கள் அனைவரும் பாராட்டுகிற ஒருவரை சடாரென கவிழ்த்து விடுவது பற்றி பேசி கொண்டிருக்கையில் எனக்கு 3 காட்சிகள் நினைவுக்கு வந்தது... முதல் காட்சி நம் கவுண்டர் நடித்த தங்கம் படத்தில் இருந்து, அந்த படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரனாக பேட்டி அளிக்கும் பொழுது சொல்லுவார்... தான் வேட்டைக்கு செல்லும் பொழுது திடிரென சிங்கம் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் உடனே இடைமறித்து "இவ்ளோ பெரிய காட்டுக்கு ராஜாவா இருக்கையே, ஒரு ஜட்டி கூட போடாம சுத்தறயே, உனக்கு வெட்கமா இல்லை?" என்றதும் சிங்கம் அவமானத்தில் திரும்பி சென்று ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டதாக சொல்வார். இந்த காட்சியை முதலில் பார்க்கையில் பெரிதாய் ஈர்க்கவில்லை, ஆனால் நண்பன் ஒருவன் அடிக்கடி யாரையாவது கிண்டலடிக்க இதை பயன்படுத்தும் தொனியை ரசிக்க துவங்கினேன்... இரண்டாவது ராமாயணத்தில் வரும் காட்சி, சீதை மிக அழகி, உலக அழகி, அவளை போல் வேறொரு பெண் எங்கும் கிடைக்க மாட்டால் என்ற பின்னர்தான் மாற்றான் மனைவி என தெரிந்தும் ராவணன் அவளை சிறைப்பிடித்தான் என்ற பேச்சு உலமெல்லாம் பரவ, சீதையை சிறை மீட்டு கிஷ்கிந்தைக்கு அழைத்து வந்த
Comments
Post a Comment