பெருந்திணை - படலம் - 5

 தன் மனதினுள் சைந்தவி மீதான ஈர்ப்பு ஒரு கொடியை போல் சரசரவென வளர்ந்துக் கொண்டிருப்பதை அசோக் உணர்ந்தான். முதலில் பார்க்க தோன்றியது. அடுத்து ரசிக்க தோன்றியது. இப்போது மனதிற்குள் துகிலுரிக்க துவங்கியாகிற்று. அடுத்து எங்கே போகும்? காமம் சார்ந்த உணர்வுகளில் இருக்கும் முரண் மிகவும் சுவாரசியமான விசயம். 


பற்றி எரியும் ஆசையும் அது தணிந்ததும் வரும் குற்ற உணர்வும் இருக்கிறதே… இதில் கொடுமை என்னவென்றால் இரண்டுமே வதைக்கும். அமைதியாக அமர்ந்திருக்கும் நபரிடம் ஒருவர் வந்து அடித்து ஆயிரம் ரூபாயை வற்புறுத்தி கொடுத்து விட்டு, அவர் அந்த பக்கம் சென்றதும் இன்னொருவர் வந்து அவரும் அடிஅடியென அடித்து இரண்டாயிரமாக பிடுங்கி சென்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அசோக்கிற்கு.


சைந்தவியை பார்த்து கற்பனை செய்த பொழுது வந்த ஏக்கமும் குத்தியது. அது தணிந்த பின் வந்த குற்ற உணர்வும் ஒரு மாதிரி வலியை தந்தது.  முகம் தானாக வாடியது. 


அனிதா அதை கவனித்து விசாரித்தாள். காய்ச்சலோ என்னவோ என்று தொட்டுப் பார்த்தாள். அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சகஜமாக சிரிக்க முயன்றான். 


ஒரு கொண்டாட்ட நிகழ்வு எப்போதும் பெண்களை உற்சாகமூட்டும். என்ன ஒன்று, அது அவர்கள் சமைக்க வேண்டிய நிகழ்வாக இருக்கக்கூடாது. மற்றபடி அலங்காரத்துடன் சென்று சிரித்து பேசி மகிழ்ந்து வருவது அனைத்து பெண்களுக்கும் பிடித்த ஒன்று. 


அனிதாவும் அன்று நல்ல மனநிலையில் இருந்தாள். அடுத்த நாள் விடுமுறை நாள். இரவினை ரசித்து கொண்டாட கூடலை விட சிறந்த வழி உண்டா? 


அசோக்குடன் வீட்டிற்கு வந்தவள் அவன் விரைவாக சென்று படுத்துக் கொண்டதை விரும்பவில்லை. தன் மனதை தன் விருப்பத்தை தன் எதிர்பார்ப்பை அவன் அந்தந்த கணத்திலேயே உணர்ந்து கொள்ள வேண்டாமா? என்று ஆயாசமாக இருந்தது. 


உடைமாற்றி விட்டு அவன் அருகே சென்று படுத்தவள் எப்போதும் போல் முதலில் கட்டிக் கொண்டாள். அவன் மார்பில் தலை வைத்துக் கொண்டாள். அவன் வெற்றுடலை கைகளால் வருடி விட்டாள். அவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். 


அவளது கரங்கள் அவனை சூடேற்ற முயன்றன. எங்கெங்கு நீண்டால் எவ்விடம் உரசினால் அவனுக்கு தீப்பிடிக்கும் என்பது நன்கு தெரிந்தவள். ஆனால் இன்று அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. சில நாட்கள் இப்படியாகும்தான். கரங்கள் போதாத சமயங்களில் இதழ்களின் சேவை தேவைப்படும். ஆனால் இன்று அதற்குள்ளாகவே அவனே தடுத்து விட்டான்.



இன்று அவனுக்கு ஏனோ சப்தமும் அடங்கியிருந்தது. ஆனால் அவளுக்கு அனிதாவின் தேவை புரிந்திருந்தது. 


ஒருவரை உச்சமடைய வைக்க மற்றவருக்கு ஆசை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அக்கறை இருந்தால் கூட போதுமானது. 


அனிதாவை தடுத்தவன் அவளை புரட்டி போட்டான். உடைகளை நீக்கி அவள் பாதங்களின் வழி பயணமானான். 


நிதானமான துவக்கம். அவள் கைகள் குறுக்கிடுவதை தடுத்து இறுக்கி பிடித்தவாறு அவன் தன் செயலை தொடர்ந்தான்.


வருடக்கணக்கில் செய்யும் எச்செயலிலும் ஒரு பாண்டித்தியம் வந்து விடும். உதாரணத்திற்கு வண்டி ஓட்டுவதை சொல்லலாம். துவக்கத்தில்தான் மிக கவனமாக பதட்டமாக ஓட்டுவோம். காலப்போக்கில் அனிச்சையாகி விடும். பாட்டு கேட்டுக் கொண்டோ, பின்னால் அமர்ந்திருப்பவருடன் பேசிக் கொண்டோ வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதையே மறந்து நாம் பாட்டுக்கு சரியாக ஓட்டி விடுவோம். இன்னும் பழகிய பாதையென்றால் சொல்லவே வேண்டாம். எங்கே துவங்கினோம்? எவ்வளவு நேரமானது என்றெல்லாம் மனதிலே பதியாமல் வந்து சேர்ந்து விடுவோம்.


அசோக் திருநாவுக்கரசனாகி அனிதாவை துடிக்க வைத்துக் கொண்டிருந்தான். அவள் முனகல்கள் அவனுக்கு பிடிக்கும். இந்தந்த வார்த்தைகள்தான் வந்து விழும் என்று சொல்வதற்கில்லை. இந்த சமயத்தில்தான் வெளிப்படையாக மனதில் தோன்றுவதை அப்படியே கொட்டுகிறாள் போல என நினைக்க வைக்கும். 


அதிலும் நாவுக்கிடையே பற்கள் அவ்வபோது வெளிப்படுகையில் அவனை அடிப்பாள். அது அவனுக்கு பிடிக்கும். அவ்வபோது அவளை அப்படி வேண்டுமென்றே சீண்டுவதும் உண்டு. மொத்த உடலையும் மடக்கி முன்னேறி விட்டு மீண்டும் படுக்கையில் சாய்வாள்.


இன்றும் அப்படித்தான். துடித்தே மொத்த சக்தியையும் இழக்க வேண்டியிருந்தது. இத்தனையும் அனுபவித்து விட்டு சும்மா விடுவாளா? பதிலுக்கு அவனை கதற விடாமல் தூக்கம் வருமா?


வழக்கமாக இரு மடங்காக திருப்பிக் கொடுப்பாள். ஆனால் இன்று அவன் தடுத்துக் கொண்டே இருந்தான். கன்னத்திலேயே போட்டு படுக்க சொன்னாள். 


அவனும் பேசாமல் படுத்துக் கொண்டான். எச்சேவைக்கும் அவசியமான நிதானம் அவளிடம் நிரம்பவே உண்டு. இரு ஊசியின் கூர்முனைகள் ஒன்றுடனொன்னு எதிர் பாயாது என்பார்கள். அவள் அதை சோதித்து பார்த்தாள். துளைக்க முடிந்தது அவளால்.


மனம்தான் உடலைக் கட்டுப்படுத்தும் என்பதெல்லாம் ஒரு எல்லைக்குத்தான். ஒரு கட்டத்திற்கு மேல் உடல் ஆளத் தொடங்கி விடும். மனம் அடங்குவது அத்தனை சுலபமல்ல. யோகிகள் போராடுவது அதனை அடக்கத்தான். ஆனால் உடல் வெல்லும் சில கணங்களில் மனம் முழுமையாக அடங்கிவிடும். சில கணங்கள்தான்.


அசோக்கின் மனம் வெறுமையானது. உடலெங்கும் பரவிக் கிடக்கும. நரம்பு மண்டலங்களில் மின்சாரம் வேகமாக பாய்ந்துக் கொண்டிருந்தது. தான் என்பதை மறந்து மொத்தமாக ஒப்புவித்துருந்தான்.


எப்போது உச்சம் தொட்டான் என்பதை அவனே அறியவில்லை.


அவள் முகம் கழுவச் சென்றாள்.


- தொடரும்


Comments

Popular posts from this blog

எதற்காக வாசிப்பு?

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்