அன்பர்களுக்கு வணக்கம். என் நண்பன் ஒருவன் சரித்திர நாவல்கள் விரும்பி படிப்பான், அவனது தந்தையுடன் பேசுகையில் அவர் நமது முன்னோர்களையும், கடவுள் வழிபாட்டையும் மறுத்து பேசியது பற்றி குறிப்பிட்டான். அது சம்பந்தமாக அவனிடம் நான் பேசியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். நான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும், என்னால எல்லா உயிரினத்தையும் அடிமைபடுத்த முடியும், நான் சக்கரத்தை கண்டு பிடிச்சுட்டேன், நெருப்பை கண்டு பிடிச்சுட்டேன், கம்ப்யுட்டர் கண்டுபிடிச்சுட்டேன்னு வெட்டியா சத்தம் போட்டு பேசறவங்க கடவுளை புரிஞ்சுக்க மாட்டாங்க, எல்லாத்தையும் கண்டுபிடிச்ச மனுசனால 2 நாள் சாப்பிடாம தூங்காம இருக்க முடியுமா? இல்லை 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டு ஒட்டுக்கா தூங்கிட்டே இருக்க முடியுமா? இன்னும் மனுசனால மனுசனையே ஜெயிக்க முடியலைய, பசிச்சா சாப்பிட்டுதான் ஆகனும், தூக்கம் வந்தா தூங்கிதான் ஆகனும், உன்னால ஒன்னும் கட்டுபடுத்த முடியாது, கடவுளை எதுக்கு வணங்கனும்? முதல்ல மனுசன் யாரை வணங்குவான், தன்னை விட வயசுல பெரியவங்களை, அதுக்கு என்ன அர்த்தம்? நான் உன்னை விட சின்னவன், உன் அளவுக்கு நான் இல்லைனு அர்
Comments
Post a Comment