Posts

கலைஞரையும் ஜெயலலிதாவையும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நாளுக்கு நாள் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது, அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்களை பற்றிய கேலிகளோ, கேள்விகளோ பத்திரிக்கையில் எழுதிவிட்டால் போதும், அவர்கள் உடனே அந்த பத்திரிக்கை அலுவலுகத்தை அடித்து நொறுக்குவது, எரிப்பது இல்லையேல் மான நஷ்ட வழக்கு போடுவது என அவர்களால் முடிந்த தொல்லையினை குடுப்பார்கள். ஆனால் இணையத்தில் அவர்களால் முடியாது, ஏனெனில் ஒவ்வொரு தகவலும் இணைய தளங்களில் வினாடி வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது, இதை தடுக்க யாராலும் முடியாது, இப்போதைய செய்தி என்னவென்றால் முதல்வர் ஜெயாலலிதா அவர்கள், முதல் அமைச்சரை தொடர்பு கொள்வதற்கென்று தனியாய் ஒரு இணைய தளம் துவங்கி, மக்களுடன் நேரடியாக தன்னை இணைத்துக் கொள்ள முயன்றுள்ளார், அதன் விவரங்கள். Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in http://cmcell.tn.gov.in/   இன்னொரு பக்கம் கலைஞர் கருனா நிதி டிவிட்டர் மற்றும் ஃபேஸ் புக் வாயிலாக தன்னை இணைத்துக் கொண்டு அவரும் மக்கள...

வேஷம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், இன்றைய தேதியில் ஒவ்வொருவரும் தங்களது சொந்த அடையாளங்களை தொலைத்து விட்டு வேலைக்காகவும், சம்பளத்திற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் நாம் வேடமிட்டு வாழ்கிறோம். அதை விளக்கும் ஒரு சிறிய நகைச்சுவை சிறுகதை. சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான். பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது. பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்று...

பிக் பாக்கெட் ஹோம் மினிஸ்டர் ஆனா?-DARUVU - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு என்னமோ தெரியலைங்க, தெலுங்கு படம் மேல ஒரு தனி பிரியம் இருக்கு, எதனாலனு தெரியலை, ஒரு வேளை அருந்ததி, மகதீரா, ஹேப்பி டேஸ், நான் ஈ, பிருந்தாவனம்னு ஏகப்பட்ட விதமா படம் வர்ரதாலோயோ என்னவோ போங்க, சரி இன்னைக்கு நாம பார்க்க போற படம் 'தருவு'. தெலுங்கு சிறுத்தை (விக்ரமார்குடு) பார்த்ததுல இருந்தே ரவி தேஜாவ எனக்கு பிடிக்கும். அந்த மனுசன் படம் எதுவும் அதிகம் சீரியஸ் ஆ இல்லாம காமெடிய மையமா வச்சே எடுப்பாங்க, அதை நம்பித்தான் எல்லா படமும் பார்க்கறேன். நம்ம வல்லத்தான் பதிவர் எழுதுன விமர்சனத்தை பார்த்துட்டு இந்த படம் பார்த்தேன். திரும்பவும் எமலோகத்தை சீனுக்குள்ள கொண்டு வர்ர கான்செப்ட், படம் ஆரம்பத்திலேயே வயசானதால தன் மகன் பிரபுக்கு எமன் பட்டம் குடுக்கற சீனியர் எமன் நம்ம பழைய '"எமனுக்கு எமன், அதிசிய பிறவி, எமதொங்கா " படக்கதையைலாம் சொல்லி எச்சரிக்கை பன்னிட்டுதான் போறார். ஆனா சித்ரகுப்தன் வேணும்னே லீவ் கிடைக்காத காண்டுல எமனை மாட்டி விடனும்னு திட்டம் போட்டு ரவி தேஜாவ சீக்கிரம் சாகடிக்க முடிவு பன்றார். நம்ம ரவிதேஜா யார்னா ராஜீனு சென்ன...

14 வருடங்களுக்கு பின் மீண்டும் ஸ்ரீதேவி- கலக்கல் ட்ரெய்லர்

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஸ்ரீதேவியினை தமிழர்கள் யாரும் மறந்திருக்க மாட்டோம், என்பதுகளில் இவர் இல்லாத திரைப்படமே இல்லை, இவரது 16 வயதினிலே க்ளாஸிக், ஆனால் போனிக் கபூருக்கு வாழ்க்கைப்பட்டு அம்மனி நம்மள விட்டுட்டு பாதிலேயே பாலிவுட் போய்ட்டாங்க, அவங்க நடிச்சு 14 வருசம் ஆகுது. மகிழ்ச்சியான விசயம் என்னன்னா ஸ்ரீதேவி திரும்ப நடிக்கறாங்க, அந்த படம் தமிழ்லயும் வருது, படத்தோட பேர் " English Vinglish ". படத்தோட கதை ஆங்கிலம் தெரியாம கஸ்ட படற ஹவுஸ் வைஃப் பத்திதான். ட்ரெய்லர பாத்தா உங்களுக்கே தெரியும். படம் வர அக்டோபர்ல ரிலீஸ் ஆகுது. படத்தோட ட்ரெய்லர் மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

தசாவதாரமும் டார்வினிசமும் !

Image
அன்பர்களுக்கு வணக்கம்,இந்திய இந்து புராணங்கள் அனைத்தும் உண்மை தத்துவங்களை மக்கள் மனதில் எளிதில் பதிய கற்பனை கலந்து எழுதப்பட்ட காவியங்கள், கதைகள். அவற்றின் உள்ள கருத்துகளை மேம்போக்காக பார்க்காமல் ஊன்றி கவனித்தால் மட்டுமே அவ்வுண்மைகளைபுரிந்து கொள்ள இயலும். தசாவதாரம் அதில் ஒன்று. தசாவதாரம் நமக்கு சொல்லும் கருத்துகள் இவ்வுலகம் தோன்றியது எப்படி ? மற்றும் அதில் உயிர்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பது. இது டார்வின் கோட்பாடான பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளை நமக்குத்தெரிவிக்கிறது. இந்திய நாட்டில் வாழ்ந்த பேரறிஞர்கள் தெள்ளத்தெளிவாகவும் பரிணாமக்கொள்கையை வெளியிட்டிருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியின் தோற்றம் நீரிலிருந்து தொடங்குகிறது. முதலில் நீர் பாசி இதிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி,எருமை,யானை, ஓநாய்,புலி,சிங்கம், முதலிய ஜீவப் பிராணிகள் தோன்றின இறுதியில் குரங்கு. குரங்கிலிருந்து மூதாதையினத்தின் ஒரு பிரிவு கால கிரம வளர்ச்சியின் பின் மனிதன். பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிலிருந்து ஒன்று என்பதை கவனத்தில் ...

உங்கள் வீட்டிற்கு இலவசமாய் A/C வேண்டுமா?

Image
அன்பர்களுக்கு வணக்கம், நாளுக்கு நாள் உலக வெப்ப மயமாதல் அதிகமாகிக் கொண்டே போகிறது, கோடைக் காலங்களில் வீடுகளில் உட்காரவே முடிவதில்லை, அதிலும் மின்வெட்டு நேரங்களில் என்னதான் UPS உபயோகித்தாலும் பாம் வெடிப்பதற்கு கவுண்ட்  டவுன் இருப்பதை போல எப்ப சார்ஜ் குறையும்னு பார்த்துகிட்டே இருக்கனும்.    இயற்கையா வீட்டை குளிர வைக்கலாம்னா வீட்டை சுத்தியும் மரம் நடனும், ஆனா இப்ப இருக்க இட நெருக்கடில அது முடியாது. இணையத்துல அப்படியே மேய்ஞ்சுகிட்டு இருந்தப்ப எனக்கொரு விசயம் தெரிய வந்தது. அதை உங்ககிட்ட  பகிர்ந்துக்க விரும்பறேன்.  இப்ப இருக்க மின்சார பிரச்சனைக்கு சோலார்தான் தீர்வுங்கறது பத்தி ஏற்கனவே ஒரு பதிவு போட்டேன். படிக்காதவங்க படிச்சுருங்க. ஆனா சோலர்ல இருக்க ஒரு பெரிய பிரச்சனை அதை அமைக்கறதுக்கு ஆகற செலவும் அது இன்னமும் தாராளமா மார்க்கெட்டுக்கு வரலைங்கறதுதான். இப்ப அதுக்கு ஒரு மாற்று ஏற்பாடு இருக்கு. நம்ம வீட்டு மொட்டை மாடிய வாடகைக்கு விடலாம். யாருக்குனா BRIDGE TO INDIA நிறுவனத்துக்கு, அவங்க என்ன பன்னுவாங்கனா நம்ம மொட்டை மாடில சோலார் பவர் பிளான்ட் அ நிறுவிடுவாங...

பதிவர்களுக்கு கரும்பு தின்ன கூலி 1,00,000 ரூபாயாம் - கிளம்புங்கப்பா போலாம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், பெரும்பாலான பதிவர்கள் ஏற்கனவே அறிந்த செய்திதான், ஆனால் அதில் புதிதாய் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. அது என்னவென்று சற்று விரிவாக பார்ப்போம். நம் நாட்டை பொறுத்த வரையில் பதிவர்கள் என்பவர்கள் நேரத்தை வீணடிப்பவர்கள், சண்டையிட்டு கொள்பவர்கள், வீட்டில் உட்கார்ந்து கொண்டு உலகத்துக்கு புத்தி சொல்பவர்கள் என்றுதான் பெயர், ஆனால் நான் பதிவுலகத்திற்கு வந்து மற்றவர்களின் பதிவுகளை வாசிக்கும் பொழுது எப்படி இவர்களால் எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடிகிறது? எவ்வளவு அருமையாக சொல்ல வந்த விசயத்தை ஒரு பக்கத்தில் முடிக்கிறார்கள் என வியந்ததுண்டு. பின்னாளில் நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது மற்ற அக்கறையான நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்வி "இப்படி எழுதறதால உனக்கு என்ன லாபம்?"னு தான். இந்த லாப நஸ்டம் எல்லாரும் எல்லா விசயத்துக்கும் பார்க்கறாங்க, அப்புறம் எப்படி அரசியல்வாதிங்க ஊழல் பன்ன மாட்டாங்க, சரி நாம் அங்க போக வேண்டாம். வெறுமனே மன திருப்திக்காக எழுதி கொண்டிருந்த தமிழ் பதிவர்களுக்கு தொழிற்களம் வலைப்பூ மூலமாக வருமானம் பெருக வழி செய்து கொடுத்த நமது மக்கள்சந்தை இணையதளம் வ...

2 CBI ஒரே பொன்னை காதலித்தால்?-THIS MEANS WAR திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், மீண்டும் கலகலப்பான காதல் படங்களை பார்க்க நினைத்து இன்றொரு படம் பார்த்தேன், ஆனால் படம் KNIGHT & DAY போல் ஆக்சன் காமெடி, ஆனால் கதைக்களம் சூப்பர். வாங்க நேரா படத்துக்கு போலாம். படத்தோட ஆரம்பத்துல 2 ஏஜென்ட்ஸ் ஒரு வில்லனை பிடிக்க போறாங்க, ஆரம்பத்துலயே பிடிச்சுட்டா அப்புறம் யார் க்ளைமாக்ஸ்ல வந்து பழி வாங்குவானு அவனை விட்டுட்டு அவன் சொந்தகாரங்க எல்லாரையும் போட்டு தள்ளிடறாங்க. இந்த 2 ஏஜென்ட்ல ஒருத்தனுக்கு 7 வயசு பையன் இருக்கான், ஆனா வீட்டுகாரம்மா கூட செட் ஆகலை, புதுசா ஒரு பொன்னை தேடி நெட்ல அலையறான். இங்கதான் நம்ம ஹீரோயின் அறிமுகம், ஹீரோயின் வேற யாருமில்லை, நம்ம THERE'S SOMETHING ABOUT MARRY படத்துல நடிச்சவங்கதான். யாருக்குதான் ஆசை வராது. இன்னொரு ஏஜென்ட் நம்மளை மாதிரி பிரம்மச்சாரினு சொல்லிகிட்டே ஊர்ல இருக்க எல்லார்கிட்டயும் கடலை போடற பார்ட்டி. ஒரு வினோதம் பாருங்க , 2 பேரும் சொல்லி வச்ச மாதிரி 2 ஹீரோவும் ஒரே நாள்ள ஹீரோயின் கூட கடலை போட்டு மனச பறி குடுத்துடறாங்க. அடுத்த நாள் 2 பேருக்கும் ஒரு பொன்னு பின்னாடிதான் 2 பேரும் சுத்தறோம...

AMERICAN PIE-REUNION REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை பேர் இந்த படத்தினை எதிர்பார்த்து காத்திருந்தீர்கள்? சரி எத்தனை பேர் இப்படத்தின் முந்தைய 7 பாகங்களை பார்த்துள்ளீர்கள்? பார்க்கலைனா உங்க இளமை காலத்தை சரியா நீங்க அனுபவிக்கலைனு அர்த்தம். நான் இந்த படத்தோட 4 வது பார்ட் அ பார்த்துட்டு 2 நாள் சிரிச்சு தேடி அலைஞ்சு மீதி 7 பார்ட்டையும் பார்த்தேன், 8 வதா இந்த REUNION பார்ட் வந்துருக்கு. நம்ம கூடவே வளர்ந்த, படிச்ச பள்ளி நண்பர்களை பிரிஞ்சு 8 வருசம் கழிச்சு சந்திச்சா எப்படி ஒரு உணர்வு வருமோ அப்படித்தான் இந்த படம் பார்க்கும் போது இருந்தது. ஹைஸ்கூல்ல சேரும் போது இவங்க பன்ற அலம்பல்ல ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரும் எப்படி காதலிச்சு கல்யாணம் பன்னிக்கறாங்க? அதுல எவ்வளவு கலாட்டானு கேப் விடாம சிரிக்க வச்சு 7 பார்ட் அ முடிச்சுருப்பாங்க.   இந்த படத்தோட எல்லா சீரியஸ்லயும் போரடிக்காம கொண்டு போற கேரக்டர் நம்ம ஸ்டிஃப்லர் தான். இந்த பார்ட்லயும் தல பின்னிருக்கார், இந்த படங்களை தமிழ்ல விட்டா கண்டிப்பா இவருக்கு ர...

மாற்றான் படத்தின் 2 வது ட்ரெய்லர் அ பார்க்கனுமா?

Image
அன்பர்களுக்கு வணக்கம், கொஞ்ச நாளைக்கு முன்னாடியே சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையாரா நடிக்கும் மாற்றான் படத்துக்கான முதல் ட்ரெய்லர வெளியிட்டுருந்தாங்க. இது மாதிரி ஹாலிவுட் ல வந்துருக்க "STUCK ON YOU" படத்தோட தழுவல் மாதிரி தெரிஞ்சது. அந்த படத்தோட விமர்சனம் படிக்கனுமா? மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம் ஆனா இப்ப வெளியிட்டுருக்க 2 வது ட்ரெய்லர் அ பார்க்கும் போது ஏதோ ஒரு படத்துலருந்து திருடன மாதிரி தெரியலை, பல படத்துலருந்து சுட்ட மாதிரி இருக்கு, சூர்யா ரசிகர்கள் கோவிச்சுக்க வேண்டாம், வாய்ப்பு இருக்குங்கறதை உங்களால மறுக்க முடியாது. சரி படத்தோட ட்ரெய்லர் அ இனைச்சுருக்கேன், பாருங்க. படத்தோட முதல் ட்ரெய்லர் படத்தோட இரண்டாவது ட்ரெய்லர்

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?

Image
ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான். ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு! அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான். இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வ...

இதோ ஒரு தமிழ் பற்றாளர் ,

Image
 அன்பர்களுக்கு வணக்கம், இதோ உங்களுடன் ஒரு சுத்த தமிழ் பற்றாளரை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இது பெரிய விசயமாக சிலருக்கு தெரியாமல் போகாலாம். என்னை பொறுத்த வரை தமிழராய் பிறந்து தமிழை நேசிப்பவர்கள் மிகக் குறைவு. அதற்கே இந்த பதிவு.       சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை பார்த்திருப்பீர்கள் . எங்காவது அய்யன் திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை பார்த்ததுண்டா ? ஆட்டோவிற்கும் தானிக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள். ஆட்டோ என்பதின் சரியான தமிழ் பதம் தானி (தானியங்கி - AUTO) . இப்படி தன் வாழ்வியலை முழுவதும் தமிழாகவே தமிழ் தேசியத்தின் அடிப்படையில் கட்டமைதுள்ளார் தோழர் திரு .க. சி. வாசன். இவரை பற்றி ஏற்கனவே நான் எழுதியுள்ளேன் . பிரபாகரன் என்னும் பெயரை தனது கையில் பச்சையாக குத்தியவர் இவர். இந்த திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை ஏற்படுத்தியவரும் இவரே. தானி ஓட்டுனர். இவரின் தானிக்கு தனிச்சிறப்பு உண்டு. தானி எங்கும் தமிழரின் குரலாக தமிழ் தேசிய அடையாளங்கள், வாசகங்கள். வெளியில், முத்துக் குமரன். திருவள்ளுவர் படங்கள் , உள்ளே பிரபாகரன் ...

ஸ்பெக்ட்ரம் ராஜா மீது புதிதாய் ஹவாலா வழக்கு - சிபிஐ விசாரணை

Image
ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..:  'ரா' உளவுப் பிரிவு தகவல்: டெல்லி: துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஆ.ராசாவின் பணம் என்று கருதப்படும் ரூ.110 கோடி ராஜேஷ் ஜெயின் என்பவரின் கணக்கில் பினாமியாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'ரா' உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் பணம் முறைகேடான ஹவாலா முறையில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் 'ரா' கூறியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அந்தத் துறையின் சில அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார் என பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பொருளாதாரக் குற்றங்கள், அன்னிய செலாவணி முறைகேடுகள், வெளிநாட்டு தொடர்புகள் போன்ற அம்சங்கள் அடங்கி இருப்பதால் இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் ...

திறுநீறு எதற்கு?- எளிய விளக்கம்

Image
திருநீறு விளக்கம் ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி) குறிக்கின்றது. வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார். திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை 1) கல்பம் கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு. 2) அணுகல்பம் காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு 3) உபகல்பம் மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு 4) அகல்பம் அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு "மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.   நீறிடுதல் என்பத...

தொப்பையை குறைக்கும் அன்னாச்சி

Image
பித்தக் கோளாறை போக்கும் அன்னாச்சி.. இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள். அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ர...

தென்னை - இயற்கையின் வரம்

Image
நம் வாழ்வில் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம், தென்னை.  தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.     மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள்.    பிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன. அங்கு 20 லட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது.      தென்னை, உயரமான தாவரம். நெட்டைத் தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-வது ஆண்டுக்குள் காய்க்கத்...

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ? கண்டுகொள்ளாத மீடியா?

Image
அன்பர்களுக்கு வணக்கம், நான் நாஸ்தீகன் இல்லை என்பதையும் தினம் தவறாமல் கடவுளை வணங்குபவன் என்பதையும் முதலிலேயே தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில் எனக்கு எல்லா மதத்திலும் நணபர்கள் உள்ளனர். ஒவ்வொரு புது வருட பிறப்பிற்கும் தவறாமல் சேலம் குழந்தை யேசு பேராலயத்திற்கு செல்பவன். மிகவும் தனியனாய் உணரும் போதும் அங்குதான் செல்வேன். ஆனால் மதத்தின் பெயரினை சொல்லி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் எந்த மதத்தில் இருந்தால் என்ன? உண்மையை பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை.   கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ? இந்துமதத்தை மட்டும் போட்டு தாக்கும் மீடியாக்கள் .... நித்தியானந்த ,காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தை சார்ந்த வர்கள் இவர்கள் பகிரங்க குற்ற பின்னணியில் இருகிறார்கள் என்பது உண்மை .. பல மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றும் மற்ற மத தலைவர்களை மீடியாக்கள் கண்கொள்ளததன் நோக்கம் என்னவோ ? ஒரு சில குற்றங்கள் உங்களுக்காக ..கீழே !! ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வெளி நாடுகளில் இருந்து தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை ப...

வெள்ளைக் குயிலை கண்டறிந்த விஞ்ஞானி - காலேஜ் டைரி 5

Image
அன்பர்களுக்கு வணக்கம், எனது கல்லூரி வாழ்க்கையில் என்னுடன் வாழ்ந்த சில நண்பர்களை காலேஜ் டைரி வாயிலாக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன், அதில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு முக்கியமான ஆளை, அவரது பெயரை கூறுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, ஏன் அவரே தாராளமா எழுதிக்கோ என்றுதான் கூறினார், ஆனால் அவரது பெயரிலேயே என் வகுப்பில் 3 பேர் படித்ததால் அவர்கள் வீட்டில் குழப்பம் வந்து விட கூடாது என்பதற்காக பேரைக் கூறாமல் எழுதுகிறேன், அவர் யார் என் கூற ஒரு அடையாளச் சொல் உள்ளது, அது ஒரு பறவையின் பெயர். குயில். சோனாக் கல்லூரியில் 2008 ஆம் வருடம் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் இவரினை நன்றாக தெரியும். முந்தைய பதிவுகளை படிக்காதவங்க படிச்சுருங்க, இல்லை புரியாது. சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1 ஒரு முறை அனைவரும் தேர்வுக்கு அவசரமாக படித்துக் கொண்டிருந்த போது ( சேச்சே நான் இல்லைங்க, மத்தவங்க), இவர் வந்து காமெடி பன்னுவதாக நினைத்துக் கொண்டு வெள்ளையாக இருந்த புறாவினை பார்த்து குயில் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லியதால் அன்று முதல் இவர் அனைவர...